Showing posts with label அட்வைஸ். Show all posts
Showing posts with label அட்வைஸ். Show all posts

Sunday, March 16, 2008

பிரார்த்தனை செய்வது எப்படி ?

இது இம்சைக்கு பிடிக்காது ஆனா என்னோட அம்மாக்கு பிடிக்கும். என்ன செய்யரது அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனா அப்பாக்கு இல்லை. இத பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.








Tuesday, December 18, 2007

கணினி, இணையம், குழந்தைகள் - பத்மா அர்விந்த்

17/10: கணினி, இணையம், குழந்தைகள்
தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் கிட்டதட்ட 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் இணையத்தை பயன்படுத்துவதாக 2001 இல் வெளியான அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க கல்வித்துறை வெளியிட்ட அறிக்கைபடி படி 5 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 90% கணிணியை பயன்படுத்துவதாக கூறி இ ருக்கிறார்கள்.22% குழந்தைகள் 5 வயதுடையவர்கள். 50% குழந்தைகள் 9 வயதுடையவர்கள்.


நிறைய விளையாட்டு குறுந்தட்டுக்கள் இப்போது கிடைக்கின்றன. இதில் பல எண்கள், சொற்கள் கற்றுத்தருவனவாகவும் இருக்கின்றன. இதை ஒரு அளவோடு பயன் படுத்தினால் பரவாயில்லை.


அமெரிக்க கல்வித்துறையின் கருத்தின் படி78% இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இக்குழந்தைகளுக்கு வீட்டில் கிடைக்கிறது, 68% பள்ளியில் அனுமதிக்கப்படுகிறது.


ஐந்திலிருந்து 17 வயதுக்குட்பட்ட பள்ளிக்குழந்தைகள் வீட்டு பாடம் செய்ய, மற்றும் அதை தொடர்ந்த ஆராய்ச்சிக்கு இணையதளத்தை பயன் படுத்துகிறார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளை மேலும் ஆராய்ச்சி செய்து ஒரு விரிவான குறிப்பும் கட்டுரையும் தயாரிக்க சொல்கிறார்கள். இதுவும் இதுபோல அறிவு சேர்ந்த விஷயமும் நேர்மறையான ஆக்கங்கள்.


ஆனால் அதே சமயம் குழந்தைகளின் விரல்களும் எலும்புகளும் வளர வேண்டிய நிலையில் மணிக்கணக்காக கணிணி முன் இருந்தால் அது விரைவிலேயே கார்பல் டுன்னெல் நோய் வரவும், மூட்டு வலி வரவும் காரணமாகிறது.ஒருமாதிரி கூன் போட்டு அமர்ந்திருக்கும் குழந்தைகள் முதுகு சீராக வளர்வதும் பாதிக்க படுகிறது.


கண் பார்வை பற்றி சொல்ல வேண்டியதும் இல்லை. மேலும் இவ்வாறு கணிணி விளையாட்டு விளையாடும் குழந்தைகள் நாளடைவில் மூளை வளர்சியில் மந்த நிலை ஏற்படவும் வழிபிறக்கிறது.


இது குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியில் இது போல கணிணி முன் வளரும் குழந்தைகள் விளையாட்டு போன்றவற்றில் (குழு விளையாட்டில்) ஈடுபடுவதில்லை எனவும் அதனால் மனிதர்களின் உடல் மொழியை கற்க முடிவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். பழக,, விட்டு கொடுக்க என்பது கற்று தேர்வதில்லை.


மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தெரிவதில்லை என்று கூறுகிறார்கள்.இப்போது குழந்தைகள் உடனடி தகவல் அனுப்புவது, மின்மடல் அனுப்புவது என்பதோடு அதில் குறைந்த வரிவாக்கமும் பயன் படுத்துவதால் மொழி ஆளுமை அடியோடு குறைகிரது.


பள்ளியில் கொடுக்கும் பாடங்களுக்கும் பல இணைய கட்டுரைகளை வெட்டி ஒட்டி போட்டு எது என்று தெரியாமல் காப்பி அடிப்பதால் பல பள்ளிகள் “plagiarism” வெகுவாக கண்டிக்க தொடங்கி இருக்கின்றன.


இப்போது பல இணையதள சூதாட்டங்களில் குழந்தைகள் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இது பல ஆபத்துக்களில் கொண்டு விடக்கூடும். இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் பிறகு மீள்வது கடினம்.


சமீபத்தில் நியுஜெர்ஸியில் ஒரு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் இணயத்தில் செய்த மோசடிக்காக சிறைக்கு செல்ல நேர்ந்தது.

முதலில் காவலர்கள் கைது செய்ய சென்றபோது, மறுத்த பெற்றோர்கள் ஆதாரங்களை பார்த்து அதிர்ச்சியில் செயல் மறந்து போய்விட்டனர். முதலுக்கே மோசம் போன போது செய்வதொன்றும் இல்லை.விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் போட்டி நிறுவன அதிபர், இந்த மாணவனை அணுகி இருக்கிறார். மாணவன் கேட்ட விலல மிகுந்த விளையாட்டு ஷூக்கள் தந்திருக்கிறார் பரிசாக.

அவர் கேட்டு கொண்டதன் பேரில் இந்த மாணவன் போட்டி நிறுவத்தின் விற்பனை இணயதளத்திற்கு ஆயிரக்கணக்கில் தொடுப்பு கேட்கும் ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்திருக்கிறான். (hits to the site) இதன்மூலம் போட்டி நிறுவத்தின் விற்பனை இணையதளம் பலநாட்கள் செயலிழந்து போனது.

நிறுவன அதிபர் தந்த புகாரில் விசாரித்த உள்துறை, அந்த தொடுப்பு அதிகமாக வரும் இனைய இணைப்பு, அதன் மூலம் கணிணி என் று கண்டறிந்து மாணவனை கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் மாணவன் கணிணியில் விளையாடுவதாக நினைத்து கொண்டுள்ளனர்.ஷூக்கள் கொடுத்த போட்டி நிறுவன அதிபர், அன்பளிப்பாக என் பக்கத்து வீட்டு மாணவனுக்கு கொடுத்தேன், நான் செய்ய சொன்னதாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு தப்பி விட்டார். மாணவன் வழக்கு விசாரணையில் இருப்பதாக அறிகிறேன்.


கணினியே கூடாது என்பதல்ல, இணையதளத்தை பயன்படுத்த பெற்றோரின் அனுமதியும் பாதுகாப்பும் தேவை.


இதற்கு பெற்றோர்கள் தாங்களும் குழந்தைகளுடன் கலந்து பேசி சில நேரம் அவர்களுடன் செலவழிக்க வேண்டும். பேச உரையாட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.


மற்ற பள்ளி நன்பர்களுடன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் வாரத்தில் ஒருநாள் அவர்களை அழைத்தோ அல்லது அவர்கள் வீட்டிற்கு அனுப்பியோ விளையாட செய்ய வேண்டும்.


உறவு முறைகளில் கலந்து கொள்ள பழக வாய்ப்பு தர வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் பண்பும் , வீட்டில் உள்ள உறுப்பினரோடு பேச, விளையாட ஒன்றாக சில வேலைகள் செய்ய என்று ஒருவருக்கொருவர் அனுசரித்து போகும் நிலை வளர்க்க உதவ வேண்டும்.
வார இறுதியில் கணினியில் செல்வழிக்க சில குறிப்பிட்ட கால அளவும், வீட்டு பாடங்கள் செய்வதில் சில கால அ ள வும் கணிணி உபயோகிக்க அனுமதியும் தந்து அவற்றில் உறுதியாக இருந்து செயல்படவும் வேண்டும்.
இந்நிலை மாறாவிட்டால் வீட்டிலேயே ஒருவருக்கொருவர் மின்மடல் அனுப்பியும் உடனடி தகவல் தந்தும் செய்திகள் பரிமாறிக்கொள்ளும் காலம் வந்துவிடும்.

குழந்தைகள் பொம்மைகள் இல்லை - பத்மா அர்விந்த்

இது எங்க இந்த மாதத்தின் 100வது பதிவு, பிளிஸ் படித்து பார்த்து உங்க கருத்து சொல்லுங்க. நன்றி நன்றி நன்றி பத்மா அர்விந்த்.

குழந்தைகள் பொம்மைகள் இல்லை

உறவுகளையோ நட்புகளையோ சில சமயம் முடித்து கொள்ளும் போது நமக்கு அதை மனம் புண்படுத்தாமல் அல்லது நோகடிக்காமல் செய்ய தெரிவதில்லை. உறவை முடிந்த பின்னும் நாம் அதை பற்றி யாருடனாவது பேச நேர்ந்தால் அதில் நம் மீது தவறே இல்லை என்பதை நியாயப்படுத்த காரணங்கள் அடுக்குவதும் என்னைப்பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.

உறவுகள் முறிந்து போக இருவருக்கும் சரியான அலைவரிசை இல்லாதது காரணமாக இருக்கலாம். யார் மீதும் தவறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

நான் கவனித்தவரை பெற்றவர்கள் சில சமயம் குழந்தைகளிடம் ஒருவரை பற்றி தவறாக பேசுவது அவர்கள் மனதில் தவறான எண்ணம் தோன்ற காரணமாகிறது. பெற்றவர்கள் இடையே விவாதங்கள் நிகழ்வதில் தவறில்லை, அது ஒருவகையில் நல்ல ஆரோக்கியமான மன நிலைக்கு காரணமாகிறது.

குழந்தைகளுக்கு வயது வந்த இருவர்கள் அபிப்ராய பேதங்கள் கொள்வதிலும் அதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறில்லை என்ற எண்ணத்தை தரும்.இது ஆரோக்கியமான சூழலை தரும். கருத்து வேற்றுமை இருந்தாலும் நேசம் கொள்வதில் தவறில்லை என்பதையும் காட்டும்.

ஆனால் அதுவே கோபமாகி கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்பு உணர்ச்சியை வெளியிட்டால், அது குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு பெற்றோர்கள் சமாதானமாகி போனாலும் குழந்தைகளால் மறக்க முடிவதில்லை.

சில வீடுகளில் மனைவையை தாழ்த்திப்பேசி, குழந்தைகளும் வளார்ந்தபினும் அம்மாவிற்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில் அவமதிக்கிறார்கள். சாதாரண நடைமுறையில் இது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் விவாகம் ரத்தானபின், குழந்தைகளை பகடைக்காய்களாக பயன் படுத்த தொடங்கும் போது குழந்தைகள் மனத்தை அளவிட முடியாத அளவு காயப்படுத்துகிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், தந்தைக்கு சில நாட்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டாலும், குழந்தைகளிடம் தவறாக நடந்ததாகவோ, மதுவிற்கோ, போதைப்பொருளிற்கோ அடிமையானவன் என்றோ சட்டப்படி எந்தவித ஆவணங்களும் இல்லாததால், குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது.
சின்ன குழந்தையின் மனதில் தந்தையை பற்றிய தவறான கருத்துக்கள் வித்திடப்பட்டிருக்கிறது. ஆகையால் அடிப்படையில் ஆழ்ந்த வெறுப்பு இருப்பதால், தந்தை வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் பயத்துடனேயே போகிறார்கள். அங்கிருந்து வந்தவுடன் உடனேயே தந்தையை பற்றிய விவரங்களை கேட்டு நச்சரிப்பதாலும், நாளடைவில் குழந்தைகள் யாருக்கு எது பிரியமோ அதை சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள விரும்புகிறார்கள்.

இரண்டு வீட்டில் மாறி மாறி இருபது குழந்தைகளுக்கு அதிக துன்பத்தை தரக்கூடிய ஒரு விஷயமாகும். அதை கூடுமானவரையில் எளிமையாக்குவது சால சிறந்தது. கணவன் மனைவி இருவரின் ego போராட்டத்தில் அடிக்கடி பள்ளி, மருத்துவர்கள் இவர்களை மாற்றுவதும், உன்னைவிட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கண வனும், நான் மட்டும் என்ன குறைந்தா போய் விட்டேன் என்று மனைவியும் போட்டியிடும் போது இடைப்பட்ட பிள்ளைகள் பாவம் தவிக்கிறார்கள்.இதற்கிடையில் பெண்ணை பெற்றவர்கள் மகளின் கணவனை வசை பாட, கண வனின் பெற்றவர்கள் மருமகளை வசை பாட, அதிக சினம் கொண்டவர்களாகவும் மனதில் வேரூன்றிவிட்ட வெறுப்போடும் தவிப்பது குழந்தைகள்தான்.

இதுவே நான் மேற்சொன்ன குடும்பத்தில் 6 வயது குழ்ந்தையின் தற்கொலையில் முடிந்திருக்கிறது. பள்ளி கவுன்சிலர் ஒரு வாரம் முன் பேசும் போது எதைச்சையாக மாணவன் தான் இறக்க விரும்புவதாக சொல்ல, அவர் அன்னையை அழைத்து பேசி இருக்கிறார். அம்மா மகனை அழைத்து, நான் படும் கஷ்டம் போதாதா, நீ வேறு படுத்த வந்தாயா என்று சொல்லி அடிக்க, அப்பாவும் கண்டு கொள்ளாமல் விட, அதை சாக்காக கொண்டு வழக்கறிஞரிடம், என் மனைவியே இதற்கு காரணம் என்று சொல்லி இன்னொரு குற்றப்பத்திரிக்கை தயாரிக்க கவனத்தை செலுத்தி இருக்கிறார்.

பள்ளி ஆசிரியை பெற்றவர்களிடம் சொன்னதுடன், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது. விவாகரத்து ஆன பின்னாலும் குழந்தைகள் நலன் கருதி, பெற்றவர்கள் நட்பு பாராட்ட முடியாமற்போனாலும், ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருக்கவாவது முயற்சிக்கலாம்.

குடியும் குழந்தையும் - பத்மா அர்விந்த்

30/06: குடியும் குழந்தையும்
மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும் போது மனிதன் ஒரு செயற்கையான உலகில் இருக்க விரும்புகிறான். இதனாலேயே அதிக செயற்கை தனங்கள் நிறைந்த திரைப்படங்கள்,போதை மருந்துகள் போன்றவை ஒருவித கற்பனை உலகில் தப்பிக்க பெருமளவில் உதவுகின்றன.

பெரும்பாலானோர் இவற்றை ஒரு பொழுது போக்காக செய்வதும் உண்டு. அப்படியாக மது அருந்தும் பழக்கமும் தொடங்கி இருக்க வேண்டும்.

பொழுது போக்கிற்காக, ஒரு சமுதாய அங்கீகரிப்பிக்காக என்று தொடங்கி பலர் அதன் கட்டுடைப்பில் செல்வதும் சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஹோலியின் போது பாங்க் என்ற ஒருவித திரவம் தயாரித்து அதை அருந்தி போதையேறி ஆடுவதும் கேளிக்கைகளில் பங்கு கொள்வதும் உண்டு. இதில் ஒப்பியம் சிறிதளவு கலந்திருப்பதாக சொல்ல கேட்டிருக்கிறேன்.

பல ஹிந்தி திரைப்படங்களில்(டானில் வரும் பான் பனாரஸ் வாலா, சில்சிலா வில் வரும் ஹோலி, ஷோலேயில் வரும் ஹோலி )போன்றவற்றில் இதை காட்டியிருப்பார்கள்.

அமெரிக்காவிலும் ஒருகாலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது பல கடத்தல்களும் அது தொடர்ந்த வன்முறைகளும் இருந்தது. பிறகு தடை நீங்கிய நாளில் அடிமாட்டு விலைக்கு புச் (Buch) ஒரு நிறுவனத்தை வாங்கி இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளத்துவிட்ட பட்வைஸர், மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் பல வரத்தொடங்கின. இவற்றில் கார்ப்போஹய்ட்ரேட் குறைவாய், கலோரி குறைவாய் என பல வகைகளில் கிடைக்க ஆரம்பித்தும், மதுவிலக்கு வந்தால் வேறு தொழில் வேண்டும் என்ற பாதுகாப்பாய் அன் ஹைஸ்ர்புச் போன்ற நிறுவனங்கள் உருளைக்கிழங்கு வறுவல், பழ ஜூஸ், சோடாக்கள் அடைக்கபடும் தகர அலுமினிய டப்பாக்கள் , குழந்தைகளை கவரும் கடல் உலகம் (sea worlds) போன்று பலவற்றிலும் முதலீடு செய்து நடத்துகிறார்கள். அனஹ்ய்ஸர் புச் நிறுவனத்தை பற்றி தனி பதிவே எழுதலாம்.

மது உடலில் ஆல்கஹால் டீஹைட்ராஜினேஸ் என்ற புரதத்தால் செரிக்க படுகிறது. துத்தநாகம் முக்கியமாக கொண்ட இந்த புரதம் 6 வகைகளில் உண்டு. இவற்றில் பெண்களுக்கும், இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் உள்ளவர்களுக்கும் செரிக்கும் சக்தி குறைவு என்பதால் குறைந்த அளவு மதுவே போதையை தரவல்லது. பியர் அருந்தும் வயதான 21 வந்தவுடனே, ஆண்கள் அதை ஒரு மதுக்கடையில் கொண்டாடுவதும் கோடையில் பல விபத்துக்கள் வருவதும் சகஜமாகி இருக்கிறது.

அரசின் சட்டப்படி 0.1% மது இரத்ததில் இருப்பின் கைது செய்து, வாகனத்தை கைப்பபற்ற முடியும். வாகனம் செலுத்தும் உரிமை 6 மாதம் தடை செய்ய படும். இங்கே அமெரிக்காவில் அது சுதந்திரத்தை தடை செய்யபடுவது போல என்பதால் மிக அதிக தண்டனை ஆக கருதப்படுகிறது. மூன்று முறைக்கு பின் 1 மாதம் சிறையில் இருக்க வேண்டும். இதனால் காப்பீடு, தனி வரி என 20,000$ வரை அபராதம் செலுத்த நேரிடும்.

இரண்டு பியரோ ஒரு கோப்பை ஒயினோ குடிப்பது நல்லது என்று சொன்னாலும் நண்பர்களுடன் குடிக்கும் போது அளவு மீறுவது சகஜம். மதுவிற்கு அடிமை ஆதலும் மதுவை அபயோகிப்பதும் வேறு வேறு.

மதுவை அபயோகிப்பவர்களால் ஒரு மாதம் கூட மதுவை தொடாமல் இருக்க முடியும். ஆனால் குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் குடிப்பதும், எவ்வளவு குடித்தாலும் மறுநாள் வழக்கம் போல பணிக்கு செல்லவும் இயலும். நாளாவட்டத்தில் இதில் ஒருவித tolerance நிலைக்கு வந்துவிடுவார்கள்.

மூன்றுமுறை காவலர்களால் குடியின் போதையில் வாகனம் ஓட்டியவர்கள் கட்டாயமாக ஆல்கஹால் அநாமதேய கூட்டங்களுக்கு சென்று ஒரு படிவத்தில் கையொப்பமும் வாங்க வேண்டும்.இவை மிக வெற்றிகரமாக செயல் படும் திட்டம்.

இவற்றில் முதல் கட்டம் குடிக்கு அடிமையானவர்கள் அதை ஒப்புக்கொள்வதிலும் ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருப்பதிலும் ஆரம்பிக்கிறது. பல போதை தரும் பழக்கங்களுக்கும் மறுப்பு (denial) ஒரு முக்கிய குறைபாடு.அல்கஹால் அநாமதேயம் இதை முதலில் களைகிறது. நான் ஆர்வத்தின் மேலிட்டும், இதில் உள்ள நிதி திட்டம் பற்றியும் அறிய ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குழந்தைகளுக்கு தனியாக அறிவுறைகள் தரவும், மனைவியர் படும் துன்பத்தை கேட்டு அறிவுறை கூறவும், ஒருவருக்கொருவர் உதவியாக தங்கள் அனுபவங்களை சொல்வதுமாக கூட்டம் நடக்கிறது. பெண்களின் அனுபவங்களும் காவலரை அழைத்து அனுமதி மறுப்பு வாங்கியபோதும் கணவனால் படும் துன்பங்கள், குழந்தைகள் அடையும் மன உளைச்சல்கள் கேட்டால் மதுவின் பக்கம் செல்லகூட மனம் வராது.

இதைப்பற்றி இன்று எழுதக்காரணம் நேற்று நடந்த ஒரு சம்பவம். மனைவி பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு மென்பொருள் வெளியிடும் தேவை இருந்ததால் வீட்டிற்கு தாமதமாக வர நேர்ந்திருக்கிறது. அவருடைய கணவன் பொதுவாகவே நல்ல ஒத்துழைப்பு தருவதோடு தன் குழந்தைகளின் பேரில் அதிக அன்பும் உடையவன்.

ஆனால் அன்று அலுவலில் நடந்த ஒரு குழப்பத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறான். இரண்டு பியரில் ஆரம்பித்து அது மெதுவாக 6 வரை போக, பசி என்று சொன்ன குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பீட்சா கடைக்கு செல்லும் வழியில் வாகனம் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இரத்ததில் 0.15% மது இருந்ததும், குழந்தைகள் பலத்தகாயங்களுடன் மருத்துவமனியில் இருக்கிறார்கள். கணவன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். உற்றார் உறவினர் அனைவரும் அந்த பெண்ணின் தவறு என்று குற்றம் சாட்ட, பணம் என்று அலைந்ததும் காரணம் என்று சாட, மன நிறைவுக்காகவும் பணிக்கு செல்லும் அவர்கள் இருவரும் இப்போது பலத்த மன உளைச்சலில்.

கணவன் மீதும் மனைவியின் மீதும் குழந்தைகளை கவனிக்க தவறிய குற்றம் வரும் (குடிகாரரின் மேற்பார்வையில் குழந்தைகளை தனியாக இருக்க விட்டது), குழந்தைகள் ஊனமானால் வாழ்நாள் பூராவும் அவர்களின் குர்ற மனப்பான்மை ஊராரின் ஏச்சும் பேச்சும் என்று இவை தேவைதானா? கணவன் மீடு குழந்தைகளை விபத்துக்குள்ளாக்கிய குற்றமும் சேரும். வாழ்க்கையில் முன்னேற என்று நாடு விட்டு நாடு வந்து இந்த தேவையில்லாத அவஸ்தைகள் தேவைதானா?

தயவு செய்து அதிகமாக குடித்தால் வாகனம் செலுத்தாதீர்கள்.

Monday, December 10, 2007

88 பர்த்டே பார்ட்டிக்கு நோ!

எங்க வீட்டில பர்த்டே பார்ட்டி செய்யமாட்டங்க அம்மா. அதுல எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது. அம்மா கிட்ட கேட்டு இல்லன்னா அப்பாகிட்ட ஓகே வாங்கிக்கலாம்லா எங்க வீட்ல கிடையாது. அம்மா நோ சொன்னா அப்பாவும் நோ தான் சொல்வாங்க. அப்பா நோ சொன்னா, அம்மாவும் நோ தான் சொல்வாங்க. ரொம்ப அதிகமாக பார்ட்டீக்கும் அனுப்ப மாட்டாங்க.

பிறந்தநாள் என்றால், எங்களுக்கு பிடித்த சமையல், சாயந்திரம் புது டிரஸ் போட்டு, வீட்டிலேயே சிம்பிளாக கேக் வெட்டி, கோயிலுக்கு போவோம். அதன் பிறகு அப்பா எங்களுக்கு பிடித்த ஹோட்டலுக்கு கூட்டி போவார். அம்மா, அப்பா இருவரும் பரிசு தருவார்கள்.

3 வருஷம் முன்னாடி என்னோட பர்த்டே அன்றைக்கு கோவிலுக்கு போயிட்டு, அம்மா, அப்பா சூப்பர் மார்கெட் போயி, சோப், ஷாம்பு, பால் பவுடர், பருப்பு அரிசி எல்லாம் வாங்கி கிட்டு எங்களை ஒரு பெரிய இடத்திற்கு கூட்டிட்டு போய் ஒரு அங்கிள் கிட்ட என்னை கொடுக்கச் சொன்னாங்க. அந்த அங்கிள் பெரிய ஹாலுக்கு கூட்டிட்டு போய் நிக்க வெச்சாங்க.

அப்ப அங்க நிறைய பசங்க வந்து எனக்கு HAPPY BIRTHDAY பாடினாங்க.
நான் கொடுத்த சாமான்களுக்கு நன்றி சொன்னார்கள். வெளியே வந்த போது அப்பா சொன்னார், " இவர்களுக்கு பெற்றோர்கள் இல்லை. அதனாலே இவர்கள் அனனவரையும் இந்த ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
நாம் இப்போது கொடுத்த பொருட்களை இவர்கள் அனனவரும் 1 வாரத்திற்கு
உபயோகிப்பார்கள்.

நம் வீட்டில் எந்த ஒரு முக்கியமான் நிகழ்ச்சியின் போதும் நம்மால் இயன்ற வரை இவர்களைப்போன்றவர்களுக்கு உதவுகிறோம்.

ப்ர்த்டே பார்ட்டி வைத்தால் சாப்பிட போவது உன் நண்பர்கள். அவர்களுக்கு வேண்டியது செய்ய பெற்றவர்கள் இருக்கிறார்கள். இப்படியும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனாலே நாங்கள் பார்ட்டி செய்யாமல், இவர்களுக்கு உங்கள் பெயரில் உதவி செய்கிறோம்" என்றார்.

இப்பொழுதெல்லாம் நாங்கள் வருத்தப்படுவது கிடையாது. நல்லதை சொல்லிக்கொடுத்த அம்மா, அப்பாவிற்கு நன்றி சொல்லி நாங்களும் சந்தோஷமாக பர்த்டே பார்ட்டிக்கு நோ சொல்லிவிட்டோம். :))

(அப்பப்போ எங்க பிளாக் பக்கமும் வாங்க அங்கிள்ஸ் & ஆண்டிஸ்)

ஆஷிஷ் .

Wednesday, December 5, 2007

63. குட்டீஸ் தத்துவம் - U/A பதிவு

எங்கள் பதிவுகள் மொத்தம் மூன்று வகை.
U - பதிவு என்றால் ஒன்லி பார் குட்டீஸ்
U/A -பதிவு என்றால் அது குட்டீஸ்கான பதிவு ஓல்டீஸ் படிச்சி உங்க வீட்டு குட்டீஸ்க்கு கத்துகொடுக்க, அப்படியே ஓல்டீஸ்ம் கத்துகலாம்.
A - பதிவு என்றால் அது மொக்கை பதிவு ஒன்லி பார் ஓல்டீஸ் , குட்டீஸ்க்கு நோ யூஸ் ஒக்கேவா.

சரி இன்றைய தத்துவம் ஸ்பான்சர்டு பை புதுகை தென்றல்
சிரிப்பு-SMILE


A Smile costs nothing but it gives you a lot
A Smile enriches the one who receives it without making poor the one who gives.
A Smile lasts just a moment but it's effect lasts forever
No body is so rich that doesn't need it, nor so poor to be not able to give it.

Brings happiness to everyone and everywhere

A smile cannot be bought or borrowed

and Finally

When you were born everybody was smiling and you were crying; live in a way that when you are gone, everybody cries and only you smile...