Thursday, November 15, 2007

வெள்ளி காலை எட்டு மணி - அபிஅப்பாவிற்கு பிறந்த நாள் பரிசு

உடனடியாக உங்களது செல்பேசியை எடுத்து அதில் வெள்ளி காலை 8.00 மணிக்கு அலாரமோ,ஞாபகமூட்டலோ ( Reminder) வையுங்கள். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களிடம் செல்பேசி இல்லையென்றால் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நம்மிடைய தனது அனுபவங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்லி வந்த அனுராதா ஆன்ட்டி சில தினங்களுக்கு முன் சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளதாக பதிவு வந்தது. அதைத் தொடர்ந்து நிலா அக்கா அனைவரும் இறைவனிடம் அனுராதா ஆன்ட்டிக்காக பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று பலரும் பிரார்த்தவை செய்தனர். இதே போல இன்னும் பலரும் பிரார்த்தனை செய்திருந்தனர். இப்போது அனுராதா ஆன்ட்டி ஓரளவு தேறி வருவதாக பதிவில் தெரிவித்துள்ளனர். 18 ந்தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். பிரார்த்தனைக்கு என்றுமே கடவுள் செவி சாய்ப்பார்.

அனுராதா ஆன்ட்டியின் உடல்நிலை நல்ல முறையில் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் வேண்டும் விதமாக அபிஅப்பா தனது பதிவில் வெள்ளி காலை 8:00 மணிக்கு உலகில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே உங்கள் அலாரமோ, ஞாபகமூட்டலோ வந்தால் உடனடியாக இரண்டு நிமிடம் கடவுளிடம் அனுராதா ஆன்ட்டிக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அபிஅப்பாவிற்கான பிறந்த நாள் பரிசை வழங்குங்கள்.

நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் உங்களது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். இது எங்கள் குட்டீஸ் கார்னரின் அனபான வேண்டுகோள்.

அமீரகத்தில் உள்ள மாமாக்கள் உங்கள் தூக்கத்தை கலைப்பதை இந்த குட்டீஸ்க்காக மன்னித்து பிரார்த்தனை செய்யவும்.

அன்பு குட்டீஸ்

நிலா

பவன்

அப்ரா

மாதினி

அம்மு

11 comments:

said...

பதிவுக்கு நன்றி குட்டீஸ்களா.......!

சென்ஷி

Anonymous said...

வெச்சாச்சி....நன்றி...இம்சை

said...

குட்டீஸ் = நிச்சயம் செய்யுறோம் - அத விட வேற என்ன வேல - அபி அப்பாக்கு நல்ல மனசு

said...

கண்டிப்பாக நன்றி வித்யாக்கா

said...

கண்டிப்பாக செய்வோம்.

குட்டீஸ்க்கு நன்றி ;)

said...

நாங்களும் அலாரம் வச்சாச்சு. நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.

said...

குட்டீஸ்! நானும் என்கூட இருக்கும் கிட்டதட்ட 35 பேர் பிரார்த்ட்தனைஇகு ஒத்துகிட்டாங்க!அனேகமா நாளை காலை என் இடத்தில் கூடுவார்கள்! முடியாத பட்சத்தில் தன் இடத்தில் பிரார்த்த்ஹனை நடக்கும்! நீங்களும் வேண்டிக்கோங்கப்பா! நல்லதே நடக்கும்!!

said...

நாள் ; 16.11.2007 வெள்ளி
காலை 07:50 மணி - இடம் சென்னை
----------------------------------
காலை 8 மணிக்கு சகோதரி அனுராதாவிற்காக கூட்டுப் பிரார்த்தனை.

குட்டீஸ்க்கும் அபி அப்பாவிற்கும் மற்ற நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

சகோதரி சீக்கிரமே உடல் நலம் பெற்று பழைய நிலைக்குத் திரும்ப - மன வலிமை பெற எல்லாம் வல்ல இறையை மனதார வேண்டுகிறோம்.

said...

பரிசு கொடுத்துவிட்டேன்.

( குட்டீஸ் லிஸ்ட்ல நான் எங்க? :( )

said...

பரம வைத்தியனானவன் நீ !!

உன்னுடைய சித்தம் இந்த நோயைப் போக்கி அருளும் சுவாமி !!

நீ நினைத்தால் முடியாதது எதுவுமில்லை.

இவ்வுலகில் படைத்த எம்மை நடமாடச் செய்து என்னால் இயன்ற நலன்களை பிறருக்குச் செய்ய என்னை ஆசிர்வதியும். என் நோயின் கொடுமையைப் போக்குவாயாக இறைவனே!! என் குடும்பத்திற்கு அமைதியையும் சமாதானத்தையும் தாரும் சுவாமி.

(தோழி அனுராதாவின் பிரார்த்தனை)

said...

இந்த பதிவை மின் அஞ்சல் மூலம் அறிமுகப்படுத்திய சகோதரி வித்யா கலைவாணி அவர்களுக்கு நன்றி, அனுராதா அவர்கள் நிச்சயம் நலம் பெற்று நீடுழி வாழ்வார்கள், இன்ஷா அல்லாஹ் - நாகூர் இஸ்மாயில்