Thursday, December 20, 2007

குட்டீஸ் தேன்கிண்ணம் - ஒரு கூட்டு கிளியாக...


ஒரு கூட்டு கிளியாக
ஒரு கூட்டு குயிலாக
பாடு கண் பாடு
இறை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
என்னென்ன தேவைகள்
அண்ணனை கேளுங்கள்
(ஒரு கூட்டு..)

செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் திர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்

(செல்லும்..)
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்

தாய் தந்த அன்புக்கும்
நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கு
(ஒரு கூட்டு..)

நெல்லின் விதை போடாமல்
நெல்லும் வருமா
வேர்வை அதை சிந்தாமல்
வெள்ளி பணமா
வெள்ளை இளச்சிட்டுக்கள்
வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள்
விண்ணை தொடுங்கள்

(நெல்லின்..)
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வது தோல்வி இல்லை

ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம்
நான் செய்வேன்
என் கண்ணில் ஈரம் இல்லை
(ஒரு கூட்டு..)

படம்: படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்

3 comments:

said...

I am the firstu......

said...

//செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் திர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்//

அவ்வப்போது என்னை வந்து தட்டிச்செல்லும் வேதவரிகளில் இதுவும் ஒன்று !

நன்றி மை பிரெண்ட்

said...

நல்லதொரு பாடல்