Friday, December 21, 2007

குட்டீஸ் போட்டி - 'நச்' என்று ஒரு 'கடி'

கதை போட்டி, கவிதை போட்டி, புதிர் போட்டி எல்லாம் ஆச்சி, நாங்களும் போட்டி வைக்க வேண்டாமா அதான் 'நச்' என்று ஒரு 'கடி'.

சொந்தமா யோசிச்சி 'கடி' எழுதனும்னு நாங்க சொல்லல, அதனால காப்பி, பேஸ்ட் அலவ்ட், ஒரே ஒரு கண்டிசன் குழந்தைகள் (Ex:nila,ilamathi) முதல் பெரியவர்கள் வரை (Ex: kusumpan, mangalor siva) படித்து ரசிக்கிற மாதிரி இருக்கனும்.

நீங்க 'கடி' பின்னூட்டமாகவும் போடலாம். வீக் எண்டு முடியற வரைக்கும் டைம், ஸ்டார்ட் மீஜிக்.......

நடுவர்கள் : பொடியன், மைபிரண்ட் & நிலா

10 comments:

Baby Pavan said...

கொஞ்சம் சாம்பிள்...
\\
Monday, July 9, 2007
SMS கடிகள் ஜாக்கிரதை..
பின் வரும் கடிகளை கடித்தவர்கள் "வெறித்தனமா யோசிப்போர் சங்க கண்மணிகள்"

கடி 1:

Man1: Bus stand la Meen saapta moonu per mandaya pottuttaankalaam..
Man2: Aiyayyo! appuram?
Man1: Appuram mandaya Naai Thookittu poiduchaam..

கடி 2:

Stu: Enna sir ithu?
Tea: Question Paper..
Stu: Appo ithu?
Tea: Answer paper..
Stu: Enna Koduma sir ithu question paper la question irukkuthu..answer paper la answer’a kaanom..

கடி 3:

Thirumaal senjaa “Makimai”
Sivan senjaa “Thiruvilayaadal”
Kannan senja “Leelai”
Boys Naanga senja mattum “Eve-Teasing” aa
Enna Ulagamadaa..

கடி 4:

Tea: Avan mattum evlo nalla padikkiraan unnala Yen mudiyala..
Stu: Naan Avan Illai Madam..

எப்பிடியெல்லாம் கடிக்கிறாய்ங்க பாருங்க மக்களே!

Posted by சுப.செந்தில் at 8:18 PM

Baby Pavan said...

இது எல்லாம் வ.வா.ச அங்கிள் எழுதினது.

கடீஸ் கார்னர்-1

Butter'fly fly ஆகும் ........ Catter'pillar பில்லர் ஆகுமா?

என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.

வாழை மரம்தான் தார் போடும். ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா?

என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.

Hand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா?

டீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா?

செல் மூலம sms அனுப்பலாம். ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?

அடையார் ஆனந்தபவனின் கிளைகள் எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். ஆனா அடையார் ஆலமரத்தோட கிளைகள் அடையார்ல மட்டும்தான் இருக்கும்

பாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது

ரேஷன் கார்டு வெச்சு சிம் கார்டு வாங்கலாம். சிம் கார்டு வெச்சு ரேஷன் கார்ட வாங்க முடியாது.

நீங்க என்னதான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும், அடுத்த முறையும் முட்டைதான் போடும். 100/100 எல்லாம் போடாது.

சைக்கிள் ஓட்டினா சைக்கிளிங், ட்ரெயின் ஒட்டினா ட்ரெயினிங்கா?

மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிக் ஆகலாம், சாப்ட்வேர் என்ஜினியரால எந்த காலத்திலேயும் சாஃப்ட்வேர் ஆக முடியாது.

Anonymous said...

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????

Anonymous said...

துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க? - "வெளியிலே ஒட்ட-கம் இருப்பதாலே"

Anonymous said...

மழை மேகம் இதற்கு எதிர் பதம் என்ன? - "மழை மே நாட் கம்"

Areaக்கு எதிர் பதம் என்ன? -"எறங்குய்யா"

தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு? - "சுடறதனாலே"

cheena (சீனா) said...

பஸ் ஸ்டாப்லே பஸ் நிக்கும் - புல்ஸ்டாப்லே புல் நிக்காது.
-----------------------

ஒரு இதயம் துடிக்கும் போது யாரும் கவலைப் படுவதில்லை. ஆனல் அதுவே துடிக்க மறந்தால் எல்லோருமே துடிப்பார்கள்.
-----------------------

ஒரு பக்கத்தில் இரண்டு காலம் இருக்கும். ( Two column note book)- ஒன்று யானைக்கு மற்றொன்று பூனைக்கு - ஏன் தெரியுமா ?

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

Sanjai Gandhi said...

Response ரொம்ப கம்மியா இருக்கே.. :(

ரசிகன் said...

நல்ல விசயம் தான் ..
இந்த ரசிகன் அங்கிள் நேத்து சொன்ன மாதிரியே...

என்னோட பங்குக்கு "நிலா பாப்பா அபி அப்பாவை கடித்த நறுக்.."
http://rasigan111.blogspot.com/2007/12/ii.html
வந்து பாருங்க குட்டீஸ்..ஹிஹி,..

ரசிகன் said...

ஒரு சீக்கிரட்:பொடியன்&பேபி பவன் , குசும்பன் மாமாவும் வந்திருக்காரு.. அங்க வந்து இஷ்டப்படி நறுக் நறுக்குன்னு கடியுங்க.. :)))

Baby Pavan said...

நன்றி சீனா தாத்தா நீங்க மட்டும் தான் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு குடித்துட்டு இருக்கீங்க